Chapter 5
"ஊர்வசீ! ஊர்வசீ! அதோ வருகிறாளே! அதோ, அந்த அலையின் மேல்! அதோ! அதோ! ஊர்வசி!"
கவிஞன் அரசனை யழைக்கிறான். 'ஊர்வசி' என்ற பதில்தான்.
அரசன் கட்டளைப்படி, கடலில் தறிகெட்டுத் தேட ஆரம்பிக்கின்றது நாவாய்.
"அதோ அந்த அலைமீது... அந்தப் பெரிய அலை மறைந்துவிட்டது... அதோ தெரிகிறாள்!... அவளே ஊர்வசி...!"
அந்தப் பெரிய அலையின் கீழே பாறைகள் என்று யாருக்குத் தெரியும்?...

