வாசகக் கடிதங்களில் சில.
(1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெட்டி இதழில் வெளியானவை)
பொய், பித்தலாட்டங்களிடையே உண்மை எதிர்நீச்சல் போட்டு வெற்றி காணப் புறப்படுவதாக, சரவணனை மனம் தளர்ந்து விடாமல் கதையை முடித்திருந்த விதம் நிறைவாக இருந்தது.
- எஸ். கணேசன், திருநெல்வேலி -627001, சமுத்திரம் பொங்கியதால்,
சமுதாய சகதிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
- வடுகை. மணிசேகரன், ப. வடுகபாளையம்,
சு. சமுத்திரம் அவர்களின் "வேரில் பழுத்த பலா", சமுதாயச் சீர்கேடுகளையும், நாகரிகமான காதலையும், அழகாக, மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது
- எஸ். சுப்பிரமணியன், சென்னை - 12.
சமுதாயப் பிரக்ஞை உள்ள இதுமாதிரி கதைகள் மேன்மேலும் வந்தால்தான் நம் இளைஞர்கள், "இந்த உலகம் - உலகமல்ல. ஒரு கோலிக்குண்டைப்போல உங்கள் உள்ளங்கையிலே நீங்கள் உருட்டி விளையாடுகிற காலம் வரும்" என்ற தங்களது கனவை நனவாக்குவார்கள்.
- ஆர். நஜீர் அகமத், கோவில்பட்டி,
பெண்களின் சதைகளைக் கருவாகக் கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில் சு. சமுத்திரம் ஒரு வித்தியாசமான எழுத்தாளர்தான். அவரது 'வேரில் பழுத்த பலா எங்கள் உள்ளத்தின் உள்ளுணர்வுகளைத் தொட்டது.
- பூரீ ரங்கம் வைத்தியநாதன், கி.பி. செல்வராசு, சென்னை - 34
வருஷத்திற்கு இரண்டு நாவல்களாவது 'வேரில் பழுத்த பலா மாதிரி கொடுங்கள். ஒரு சராசரி நேர்மையான மனிதனுக்கு ஏற்படும் சோதனைகளை சு. சமுத்திரம் அழகாக, அருமையாக விளக்கி இருக்கிறார்.
- கே. குமார், சென்னை - 21.

